Monday, 4 March 2013

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம்- 1

திருச்செங்கோடு, ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். அதன் தல புராணம் மிகவும் பிரசித்தம். திருச்செங்கோட்டின் மலை மீது இருந்து ஆட்சி புரிபவர்கள் இருவர். அப்பனும், மகனும் தான். அப்பன் அர்த்தநாரீஸ்வரர், மகன் வேலவன். அப்பனும், அம்மையும் ஒரே உருவில் காட்சியளிக்கும் இடம் அது. ஆனால், கீழே கைலாசநாதரின் கொடி பறக்கிறது. மலை ஏறும் முன், நீங்கள் கீழே உள்ள ஆறுமுக சாமியை தரிசித்து விட்டு தான் போக வேண்டும்.
அன்று இந்த ஊர் மிகவும் சிறியது. ஆனால், இன்று நாகரிகம் வளர்ந்து விட்ட நிலையில், ஊரும் தன்னை விருத்தி செய்து கொண்டது.சென்ற நூற்றாண்டில், இந்த ஊருக்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ராஜாஜி, சுப்பராயன் மற்றும் ராமலிங்க முதலியார் ஆகியோர் தான். காந்தி ஆசிரமத்தை நிறுவியதால், ராஜாஜியும், அரசியலால் சுப்பராயனும் பெயர் பெற்றனர். தன் வியாபார திறமையால், ராமலிங்க முதலியார் பேசப்பட்டார்.
அந்த ஊரில் இருந்து கொண்டே திருப்பூர், கோவை, மதுரை, ஈரோடு, சேலம் என்று, பல ஊர்களில் கடைகளை வைத்து, மில்களில் இருந்து நேரடியாக நூல் வாங்கி, மொத்த வியாபாரம் செய்தார்."வி.வி.சி.ராமலிங்க முதலியார் சன்ஸ்' என்பது அவரது நிறுவனத்தின் பெயர்.
ஒழுங்கு, நேர்மை, தெய்வபக்தி, நாணயம் இவை அவரது வியாபாரத்தின் மூல மந்திரம். வி.வி.சி.ஆர்., என்றாலே, எழுந்து நின்று மரியாதை கொடுத்த பெயர் அது.
அந்த வள்ளல் பெற்றெடுத்த மக்கள் ஐவர். முதல் மகன் சிறுவயதிலேயே அதாவது, தம் 48 வயதிலேயே இறந்து விட்டார்.அவரது பெயர் கந்தப்ப முதலியார். உயிரோடு இருந்தவரை, அவர் தம் தந்தையுடன் நூல் வியாபாரத்தில் தான் ஈடுபட்டிருந்தார்.வீட்டில் இவருக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு அதிகம்.இன்னொருவர், சின்னப்ப முதலியார். அவரும் இளம் வயதி@ல@ய இயற்கை எய்தி விட்டார். அவருக்கு இளையவர், வையாபுரி முதலியார். திருச்செங்கோட்டில், "புள்ளிகார் மில்ஸ்' என்ற புகழ்பெற்ற நூற்பு ஆலையை நிறுவி, ஏராளமான குடும்பங்களுக்கு உதவியவர்.
அவருக்கு இளையவர் தான், சைவப் பெருவள்ளல் என்று, இன்றும் போற்றி புகழுகிற முருகேச முதலியார். இவரை போல, தெய்வ பக்தி கொண்டவர்கள் அக்காலத்தில் மிக சிலரே. இவருக்கும் தொழில், நூல் வியாபாரம் என்றாலும், தம் வருவாயில் பெரும்பகுதியை, இவர் இறைவன் பணிக்கே அர்ப்பணித்தார் என்பதே உண்மை.
அந்த காலத்திலேயே இவர் பல கோவில்களுக்கு தர்மகர்த்தாவாக இருந்தார். பழனி கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் அவர் நிர்வாக அறங்காவலராக இருந்தார். அந்த சமயத்தில் முருகனுக்கு தங்கத் தேர், தங்க மயில், தங்க வேல் போன்றவற்றை செய்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் போன்ற ஸ்தலங்களிலும் இவர் அறங்காவலராக பணியாற்றியுள்ளார். திருப்பதியில் பயணிகள் தங்குவதற்கு, விடுதி கட்டிக் கொடுத்த இவர், திருச்செங்கோடு மலைக் கோவிலுக்கும் முதல் முதலாக மின் இணைப்புக்கு ஏற்பாடு செய்தார். மலைப் படிக்கட்டுகளில் இப்போது விளக்கு எரிவது இவரது உபயத்தினால் தான். திருத்தணியில், படி, மண்டபம் கட்டிய இவர், தாம் செய்த காரியங்களுக்காக, விளம்பரம் தேடிக் கொண்டதே இல்லை.
அப்படிப்பட்ட உத்தமரின் தம்பி தான் டி.ஆர்.சுந்தரம். வி.வி.சி.ஆர். ராமலிங்க முதலியாரின் ஐந்தாவது மகன். ஜூலை, 16, 1907ல், திருச்செங்கோட்டில் பிறந்தார்.
டி.ஆர்.எஸ்., தன் இளமைக் காலத்தை திருச்செங்கோட்டில் கழித்தாலும், பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தார். படிப்பில் எப்போதுமே அவர் சோடை போனதில்லை. புத்திக் கூர்மையுள்ளவர். எதையும் ஆராய்ந்து அறியும் எண்ணம் கொண்டவர் என்று பெயர் பெற்றவர். சென்னையில், அவர் பிரசிடென்சி கல்லூரியில், பி.ஏ., படிப்புக்காக சேர்ந்தார். வெற்றிகரமாக பட்டம் பெற்றவுடன், அவரது குடும்பத்தாருக்கு ஓர் ஆசை. நூற்பு ஆலைகளிலும், நூல் வியாபாரத்திலும் சிறந்து விளங்கிய அக்குடும்பம், தங்களின் ஒரு வாரிசு, அயல்நாட்டிற்கு சென்று நூல்களுக்கு கலர் சேர்க்கும் கலை பற்றிய படிப்பை படிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், டி.ஆர்.எஸ்.,சை லண்டனுக்கு அனுப்பினர். 
அப்போது லண்டனில் மான்செஸ்டர் நகரில் மட்டும் தான் இத்தொழில் சிறந்து விளங்கியது. டி.ஆர்.எஸ்., லண்டன் சென்றார். நன்றாகவே படித்து பட்டம் பெற்றார். அத்துடன் காதல் வயப்பட்டும் விட்டார். தங்களுடைய புதல்வனுக்கு நல்ல விதத்தில் திருமணம் நடத்த வேண்டும் என்று நினைத்திருந்த குடும்பத்தாரின் ஆசையை நிராசையாக்கி, தன்னுடைய லண்டன் மனைவியுடன் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். சட்டப்படி நடந்த திருமணம் அது.
தங்களது மகன் இவ்வாறு செய்து விட்டானே என்று யாரும் அவர் மீது கோபப்படவில்லை. சேலத்தில் அவர்களை மாலையிட்டு வரவேற்றது, சகோதரர் முருகேச முதலியார் தான். அன்பாக வரவேற்றனர். அவர் மனதிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் தவறே இல்லை என்பது அவர்கள் முடிவு.
இந்தியாவுக்கு வந்தவுடன், தன் படிப்பிற்கு தகுந்தாற்போல், நூற்பு ஆலையை துவங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு எழவில்லை. மாறாக, அவரது கவனம் வேறுபக்கம் திரும்பியது. அப்போது, அதாவது அவர் தன் மனைவியுடன் சேலத்திற்கு வந்து சேர்ந்த போது, 1933ல், சேலத்தில், ஏஞ்சல் பிலிம்ஸ் எனும் கம்பெனி, சினிமா படங்களை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தது. படங்கள் எடுக்க வேண்டும் என்றால், அப்போதெல்லாம் கல்கத்தாவிற்கு போக வேண்டும். தமிழகத்தில் எந்த வழியும் இல்லை. ஏஞ்சல் பிலிம்ஸ் பாகஸ்தர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன், டி.ஆர்.எஸ்.,சும் கூட்டுச் சேர்ந்து படம் எடுக்க துவங்கினார்.
கடந்த, 1933-1935 வரையிலான அந்த இரு ஆண்டுகளில், இரண்டு படங்கள் எடுத்தனர். படங்கள் சுமாராக போயிற்று என்றாலும், அதற்கு பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே, அதை சொல்லியோ, எழுதியோ மாளாது. எதற்கெடுத்தாலும் கல்கத்தாவிற்கு போக வேண்டும் என்கிற நிலை, டி.ஆர்.எஸ்.,சுக்கு அலுப்பு தட்டியது. அந்த சவுகர்யங்களை சேலத்திலேயே செய்து கொண்டால் என்ன என்று, அவர் தீவிரமாக யோசித்தார். அதன் விளைவு தான், "மாடர்ன் தியேட்டர்ஸ்' என்கிற ஸ்டுடியோவின் உதயம்.
சேலம்-ஏற்காடு மலை அடிவாரத்தில் முதலில் பத்து ஏக்கர் நிலம் வாங்கினார். இது நடந்தது, 1935ல். ஸ்டுடியோவுக்குள் நுழைந்தால், படப்பெட்டியுடன் தான் வெளியே போக வேண்டும் என்கிற எண்ணத்தை அப்போதே மனதில் தேக்கி செயல்பட ஆரம்பித்தார்.படப்பிடிப்பு தளம், படப்பிடிப்புக்கான உபகரணங்கள் - பரிபூரணமான ஒரு லேபாரட்டரி, சங்கீத பதிவுக்கு ஒரு ரிக்கார்டிங் அறை.எடுத்தவரை படத்தை போட்டு பார்க்க ஒரு சிறு பிரிவியூ தியேட்டர்.இவ்வளவையும் அவர் அந்த ஸ்டுடியோவிற்குள் நிர்மாணித்தார்.1935ல், இது ஒரு அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.முன் வைத்த காலை பின் வைக்கும் பழக்கமும் அவரிடம் இல்லை.தன் மனதிற்கு சரி என்று பட்டதை அவர் செய்யாமல் விட்டதில்லை.ஸ்டுடியோ, தியேட்டர் வேலைகள் எல்லாம் முடிவடைந்த பின் தான், தயாரிப்பு வேலைகளில் அவர் ஈடுபட ஆரம்பித்தார். 1936ல், ஸ்டுடியோ முழுமை பெற்று விட்டது என்றாலும், தயாரிப்பை துவக்கியது 1937ல் தான்.
கல்கத்தாவில் தயாரித்த கிருஷ்ண லீலா, பரசுராமர், நல்ல தங்காள் போன்ற படங்கள் தான், இவர் ஸ்டுடியோ ஆரம்பிப்பதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தன என்றால், அது நிதர்சனமான உண்மை. முதல் படம், "சதி அகல்யா!'
இப்போதெல்லாம் தமிழ்படங்களில் நடிக்க, நடிகையர்களை தேடி, கர்நாடகா, ஆந்திரா, மும்பை போன்ற இடங்களுக்கு தயாரிப்பாளர்கள் போகின்றனர். இதில், முதல் புரட்சியை, டி.ஆர்.எஸ்., தன் முதல் படத்திலேயே ஆரம்பித்து விட்டார்.
கதாநாயகியை தேடி, அவர் இலங்கைக்கு சென்றார். அவர் அங்கே சென்ற போது, அவரது கண்களில் பட்ட பெண் தான் சிங்களக் குயில் தவமணி தேவி!
தவமணி தேவிக்கு, டி.ஆர்.எஸ்., கொடுத்த வேடம் என்ன தெரியுமா?பதிவிரதா சிரோன்மணியான, "சதி அகல்யா' வேடம். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் நீச்சல் உடையில் அதிகமாக காணப்பட்ட தவமணி தேவியை, இப்படிப்பட்ட ஒரு தெய்விக பாத்திரத்திற்கு போட துணிச்சல் வேண்டும்.
அது நம்மவருக்கு நிறையவே இருந்தது. ரிஷி பத்தினியான, "அகல்யா' வேஷத்தை கொடுத்து, தவமணியை அதில் நடிக்க வைத்தார். நன்றாக வேலை வாங்கினார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படம் திரையிட்ட போது, மக்கள் ரிஷிபத்தினியை தான் பார்த்தனர். நீச்சல் உடை தவமணி தேவியை பார்க்கவில்லை. படம் பெரும் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே அவர் தம் புரட்சிகரமான வேலையை ஆரம்பித்து விட்டார். அதை தொடர்ந்து வந்த படங்கள் தான், "பத்மஜோதி' எனும் தமிழ்படமும் "புரந்தரதாஸ்' எனும் கன்னடப் படமும்.
இவற்றுக்கு பின், 1938ல் எடுத்த படம் தான், "பாலன்' எனும் மலையாளப் படம். மலையாளத்தில் முதல் பேசும் படம். கேரள மாநிலமெங்கும் அது திரையிடப்பட்டது. முதல் மலையாளப்படமும் வெற்றிப்படம் என்று தான் சொல்ல வேண்டும்.
இதனால், தென்னகத்தில் தமிழ் மற்றும் பிற மொழிகளில் படங்களை தயாரிக்க ஆரம்பித்த முதல்வர்களில், இவர் மிகவும் முக்கியமானவர் எனலாம். இதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. பேசும் படங்கள் பல தொடர்ச்சியாக வெளிவந்த நேரம் அது. அப்போதைய தமிழ் பட உலகில், நூறாவது பேசும் படமாக, "பக்த நாமதேவர்' என்கிற படத்தையும் தயாரித்த பெருமை இவருக்குண்டு.
தமிழகத்தில், முதல் முதலாக சண்டை படத்தை அறிமுகப்படுத்திய பெருமை, டி.ஆர்.எஸ்.,சையே சாரும். அப்படி அவர் தயாரித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. பக்தி படங்களுக்கு மார்க்கெட் குறைந்த நேரம் அது. இது எடுத்த ஆண்டு, 1938.
அவர் எடுத்த ஸ்டன்ட் படத்தின் பெயர், "மாயா மாயவன்'. இதை நொட்டானி என்பவர் டைரக்ட் செய்தார். இதன் கதாநாயகன், டி.கே.சம்பங்கி எனும் நாடக நடிகர். இந்தப் படமும் நன்றாகவே ஓடியது. இதை தொடர்ந்து, தண்டபாணி தேசிகர், தேவசேனா நடித்த, "தாயுமானவர்' எனும் படத்தை, டி.ஆர்.எஸ்., டைரக்ட் செய்து வெளியிட்டார். தேசிகரிடம் டைரக்டர் வைத்திருந்த அபிமானத்தின் காரணத்தினால், இப்படம் எடுக்கப்பட்டது என்றே சொல்லலாம். 
அதன் பின், டி.ஆர்.எஸ்., தன் கவனத்தை ஆங்கிலக் கதைகளின் பக்கம் திருப்பினார். அதன் விளைவு தான், ""சந்தனத் தேவன்' படம். ஆங்கில கதையான, "ராபின்ஹுட்' படத்தை தழுவியது. அந்தப் படத்தின் கதாநாயகன், ஜி.எம்.பஷீர். இந்தப் படம் மிகவும் நன்றாக ஓடியது. தமிழ் மக்களுக்கு புதிய விருந்து. இதற்கு முன் ஸ்டுடியோஆரம்பித்த போது, அவர் செய்த புரட்சியை குறிப்பிட்டாக வேண்டும்.
ரா. வேங்கடசாமி
(நன்றி : தினமலர்-வாரமல்ர்  3 மார்ச் 2013)

Saturday, 27 October 2012

பம்மல் சம்பந்த முதலியார்

பம்மல் சம்பந்த முதலியார்:
முதலியாரைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது மனோகரா திரைப்படத்தின் மூலமாகத்தான். கருணாநிதி ஒரு வசனகர்த்தாவாக அந்தப் படத்தில்தான் தன் உச்சத்தை அடைந்தார். சிவாஜி அனல் பறக்க வசனம் பேசுவதைக் கேட்டு சின்ன வயதில் ஆ என்று வாயைப் பிளந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இன்றும் எனக்குப் பிடித்த படம்தான்.
முதலியார் எக்கச்சக்க நாடகங்களை எழுதித் தள்ளி இருக்கிறார். பற்றாக்குறைக்கு வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய சில ஆங்கில நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து நடித்திருக்கிறார். ஷேக்ஸ்பியரையும் மொலியரையும் கூட விட்டுவைக்கவில்லை. Merchant of Venice வாணிபுர வணிகன் ஆகி இருக்கிறது. ஆபெராவான La Sonnambulaவைக் கூடத் தழுவி எழுதி இருக்கிறார். (பேயல்ல பெண்மணியே) அந்த நாடகங்கள் எல்லாம் அவர் காலத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்தான். ஆனால் அவை எதுவும் – மனோகரா உட்பட – காலத்தைத் தாண்டி நிற்கக் கூடியவை அல்ல. மனோகராவும் நாடக வடிவத்தில் சுமார்தான். 1895-இல் எழுதப்பட்டதால் முன்னோடி நாடகம் என்று சொல்லலாம்.
அவருடைய சிறந்த நாடகமாக நான் கருதுவது சபாபதியைத்தான். இன்றும் கொஞ்சம் சிரிக்க முடிகிறது. திரைப்படமும் எனக்குப் பிடித்த ஒன்று. ஆனால் அவரது பிற ஹாஸ்ய முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஹரிச்சந்திரனை உல்டா செய்து பொய்யே பேசும் சந்திரஹரி (1923), சபாபதியை வைத்து அவர் எழுதிய இன்னொரு நாடகமான ஒரு விருந்து, வைகுண்ட வைத்தியர் (1943), சதி சக்தி (1947) எல்லாம் சுகப்படவில்லை. அந்தக் காலத்து எஸ்.வி. சேகர் நாடகம் போல இருக்கிறது.
அவருடைய பல நாடகங்கள் தொன்மைக்கதைகளின் retelling-தான். சஹதேவன் சூழ்ச்சி (1928), சதி சுலோச்சனா (1935), நல்லதங்காள் (1936), ஹரிச்சந்திரா, வள்ளித் திருமணம், யயாதி, சாரங்கதரன், சிறுத்தொண்டர், புத்த சரித்திரம் போன்றவை இப்படித்தான். சில ஒரிஜினல் நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.
பிராமணனும் சூத்திரனும் (1933) போன்ற நாடகங்களில் அவர் கலப்புத் திருமணத்தை வலியுறுத்த இன்றும் கொஞ்சம் சுவாரசியம் இருக்கிற, ஆனால் யூகிக்கக் கூடிய கதைகளை எழுதி இருக்கிறார். கள்வர் தலைவன் நாடகம் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டது. அந்தக் காலத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். காதலர் கண்கள் (1902), உத்தம பத்தினி (1934), குறமகள் (1943), தீயின் சிறு திவலை (1947), தீபாவளி வரிசை (1947), இல்லறமும் துறவறமும் (1952), முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் போன்றவை மிகச் சாதாரணமான, ஆனால் கோர்வையான, சரளமாகச் செல்லும் கதைகள். நாடகமாக பார்க்க, அதுவும் அந்தக் காலத்தில் சுவாரசியமாக இருந்திருக்கும்.
நற்குல தெய்வம் என்ற நாடகத்தில் ஒரு சுயம்வரக் காட்சி நன்றாக இருக்கும். வில்லை வளைத்து குறியை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லா மன்னர்களும் சாக்கு சொல்வார்கள். ஒருவர் இது விஷ்ணுவின் வில், நானோ வைஷ்ணவன், அது உடைந்துவிட்டால் அபசாரம் என்பார். அடுத்தவர் நான் சைவன், விஷ்ணுவின் வில்லைத் தொடமாட்டேன் என்பார்!
முதலியாருக்கு ஒரு ட்ரேட்மார்க் உண்டு. நாடகத்தில் அவ்வப்போது “லோ கிளாஸ்” மனிதர்கள் கொச்சையான பாஷை பேசுவார்கள். பெரிய மனிதர்கள் சபையில் அது ரசிக்கப்பட்டிருக்கும்.
காளப்பன் கள்ளத்தனம் (1931) (மொலியரின் Les Fourberies de Scapin) போன்ற மொழிபெயர்ப்புகள் ரசிக்கப்பட்டிருக்கும்.
முதலியாரின் நாடகங்கள் எல்லாம் காலாவதி ஆனவையே. ஆனால் அவர் முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை.
சில அபுனைவுகளையும் முதலியார் எழுதி இருக்கிறார். நாடகத்தமிழ் (1933) முக்கியமான ஆவணம். பல பழைய நாடகங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இந்த நாடகங்கள் எல்லாம் இன்று கிடைக்கின்றனவா இல்லையா என்று தெரியவில்லை.நான் கண்ட நாடகக் கலைஞர்கள் இன்னொரு முக்கியமான ஆவணம். பல கலைஞர்களைப் பற்றி சிறு குறிப்புகளைத் தருகிறது. என் சுயசரிதை கொஞ்சம் dry ஆன அபுனைவு. ஆனால் அந்தக் காலத்து பெரிய மனிதர் ஒருவரின் வாழ்வுக்கு ஒரு ஜன்னல்.
அவரது எழுத்துக்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அதுவும் சரியான காரியமே. இன்னும் நல்ல தமிழ் நாடகங்கள் அவர் லெவலில் இருந்து அவ்வளவாக முன்னேறாமல் இருப்பது நம் துரதிருஷ்டமே.
முதலியாருக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது.
மறைந்த சேதுராமன் அவரைப் பற்றி எழுதிய அறிமுகம் கீழே:
வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல அவதாரங்களில் திளைத்தவர் பம்மல் சம்பந்தம் முதலியார். இவர் நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டு என்றும் நினைவில் வைக்கத் தக்கது. நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர்.
பம்மல் சம்பந்த முதலியார் 1873ம் வருடம் ஃபிப்ரவரி 9ம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரது பெற்றோர் பம்மல் விஜயரங்க முதலியார், மாணிக்கவேலம்மாள் என்பவர்கள். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ் வாசக புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். அவரது சிறு வயதில் அவரது தாயார் உணவு ஊட்டும்போது, ராமாயணம், பாரதம், பெரிய புராணம் போன்ற இதிகாச புராணங்களிலிருந்து தினமும் ஒரு புதுக் கதையும் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தான் நாடக ஆசிரியன் ஆனதற்கு, இவைகளே காரணம் என்று நினைவு கூறுகிறார் சம்பந்தம் தனது நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில்.
மாநிலக்கல்லூரியிலும், பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார்.
உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம்.கே.ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர். நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார்.
அக்காலத்தில் நடை பெற்ற நாடகங்கள் இரவு பூராவும் நடக்கும், மங்களமாகவே முடியும் என்ற பழக்கத்தை மாற்றி, இன்பமும் துன்பமும் கொண்ட முடிவுகளுடன் நாடகங்கள் படைத்தார். ஆங்கில நாடகங்கள், வடமொழி நாடகங்கள் முதலியவற்றை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து மேடையேற்றினார். இரவு பூராவும் நடந்த நாடகங்களை மூன்று மணி நேரத்துக்குள் சுருக்கிய பெருமையும் அவரதே.
பெல்லாரி கிருஷ்ணமாச்சார்யலு என்பவரது சரச வினோத சபா நாடகக்குழு சென்னையில் நடத்திய சிரகாரி, மற்ற நாடகங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் இக்குழுவில் வழக்கறிஞர்கள், நல்ல வேலையிலிருந்தவர்கள், படிப்பறிவு மிகுந்தவர்கள் தொழில் முறையிலில்லாமல், பொழுதுபோக்குக்கெனவே நடத்தியது சம்பந்தத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே நண்பர்கள் அறுவருடன் சென்னை ஜார்ஜ்டௌனில், 1891ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி, சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
அதே சமயம் சென்னைக்கு விஜயம் செய்த பார்சி நாடகக் குழு சம்பந்தத்தை ஈர்த்தது. முக்கியமாக அவர்களது மேடை அமைப்புகள், உடை அலங்காரங்கள், பின்னணிப் படுதா, பக்கத் திரைகள், மேலே தொங்கட்டான்கள், ஜாலர்கள் எல்லோரையும் கவரும் வண்ணம் இருந்தன. அவர்களது நேரம் தவறாமையும் ஒரு காட்சிக்கும் மற்றோர் காட்சிக்கும் இடையே இருந்த இடைவெளியும், அவருக்கு மகிழ்ச்சியளித்தன. தன்னுடைய நாடகங்களிலும் இதே போல் அமைப்புகள் இருக்க வேண்டும் என்றெண்ணியவர், பின்னர் இதை நிறைவேற்றிக் காட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.
சுகுணவிலாச சபையின் நாடகங்களில் எல்லாம் சம்பந்தமே ஹீரோ – ரங்கவடிவேலு முதலியார் அவர்கள்தான் ஹீரோயின் – இந்த அமைப்பு 1895லிருந்து 1923ம் வருஷம் வரை தொடர்ந்தது. சம்பந்தம் 529 முறை நாடக மேடையில் தோன்றியிருக்கிறார். 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டுள்ளார். அவர் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68 – அவரது அனுமதியுடன் 1891லிருந்து, 1934ம் வருடம் வரை சுகுண விலாச சபையாராலும், நகரிலும், வெளியூர்களிலும் உள்ள மற்ற சபைகளாலும், அவரது நாடகங்கள் 4070 முறை மேடையேறியுள்ளன.
அரசு பதவியிலிருந்து 1928ல் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த ஏழு வருஷங்கள் வரை சுகுண விலாச சபையில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஒரு மனக்கசப்பின் காரணமாக சபையின் நடவடிக்கைகளில் தனது ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார். ஆனால் நாடக மேடையில் தோன்றும் அவர் ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பது, ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எங்களுடைய நடராஜா அமெச்சூர் குழு (தோட்டக்கார விசுவனாதன் தலைமையில்) சுகுண விலாச சபையில் ஒரு நாடகம் நடத்திய போது, தானே வலிய வந்து தோட்டக்காரன் அண்டை வீட்டுக்காரனாக இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி வசனம் பேசிய போது எழுந்த கரகோஷம் இன்னமும் எனக்கு நினைவிலுள்ளது.
முதலியார் 1967ம் வருஷம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி மறைந்தார். அவர் மறைந்தாரே தவிர அவரது நாடகத் தொண்டு இன்னமும் எல்லாருடைய நினைவிலும் பசுமையாகவே உள்ளது.
முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார் – அவற்றுள் முக்கியமானவை கீழே:
  1. மனோஹரா (1895 – சுகுணவிலாச சபையிலும், மற்ற இடங்களிலும் 859 முறை நடிக்கப் பட்டது)
  2. லீலாவதி சுலோசனா – (50 தடவை சபையிலும், மற்ற இடங்களில் 286 முறையும்)
  3. புஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்)]
  4. சுந்தரி – (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்)
  5. சாரங்கதரன் (198 முறை – மேடையில் முதல் முத்தக் காட்சி!)
  6. கள்வர் தலைவன்
  7. காலவ ரிஷி (1899 – 307 முறை மேடையேறியது)
  8. காதலர் கண்கள் (1902 – 190 முறை மேடையேற்றம்)
  9. விரும்பிய விதமே ( As You Like It தமிழாக்கம்)
  10. வாணீபுர வணிகன் (Merchant of Venice தமிழாக்கம்)
  11. அமலாதித்தன் (Hamlet தமிழாக்கம்)
  12. மகபதி ( Macbeth தமிழாக்கம்)
  13. சிம்ஹலநாதன் (Cymbaline தமிழ் வடிவம்)
  14. பேயல்ல பெண்மணியே (La Somnambula தமிழ் வடிவம்)v
  15. காளப்பன் கள்ளத்தனம்
  16. சாகுந்தலம்
  17. மாளவிகாக்கினிமித்திரம்
  18. விக்ரமோர்வசீயம்
  19. ரத்னாவளி
  20. ம்ருச்சகடிகம்
  21. யயாதி
  22. இரு நண்பர்கள்
  23. சபாபதி
  24. விஜயரங்கம்
  25. சர்ஜன் ஜெனரலின் பிரஸ்கிரிப்ஷன்
  26. சதி சுலோசனா
  27. சுல்தான்பேட்டை சப் அசிஸ்டண்ட் மாஜிஸ்ட்ரேட்
  28. நல்லதங்காள்
  29. ஸ்த்ரீ சாஹசம்
  30. விருப்பும் வெறுப்பும்
வெள்ளித் திரையில் வெளிவந்த நாடகங்கள்:
  1. காலவரிஷி (1932)
  2. ரத்னாவளி (1935)
  3. மனோஹரா (1936, 1954)
  4. லீலாவதி சுலோசனா (1936)
  5. சபாபதி (1941)
  6. வேதாள உலகம் (1948)
தகவல் ஆதாரம்:
  1. பம்மல் சம்பந்தம் முதலியாரின் “நாடக மேடை நினைவுகள்” – உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு 1998
  2. ஹிந்து தினசரியில் எஸ்.முத்தையாஎழுதிய கட்டுரை
சாரங்கதரன் நாடகத்தை சங்கரதாஸ் சுவாமிகளும் எழுதி இருக்கிறார். இது ஒரு கர்ண பரம்பரை கதையாக இருக்கலாம். சேதுராமன் சாரங்கதாரா பற்றி விளக்குகிறார்.
இருவருமே சாரங்கதரா எழுதி இருக்கலாம். பம்மல் எழுதியது நிச்சயம் என்பது கீழ்க்கண்ட குறிப்பிலிருந்து தெரிகிறது – பக்கம் 167 நாடக மேடை நினைவுகள்

“”இனி மனோஹரனுக்குப் பின் நான் எழுதிய, எனது ஏழாவது நாடகமாகிய ‘சாரங்கதரன்’ பற்றி எழுதுகிறேன் – என் நண்பன் அப்பு என்னிடம் ‘இனிமேல் நீங்கள் என்ன நாடகம் எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டான். — ‘இதை நீ ஏன் கேட்கிறாய் உன் மனதில் உள்ளதைச் சொல்’ என்றேன் — நான் சாரங்கதரா நாடகம் எழுத வேண்டுமென்றும் அதில் அவன் சாரங்கதரனாக நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தான்…

இந்த நாடகம் எங்கள் சபையால் நடிக்கப் பட்ட போது சசிரேகா என்ற தெலுங்குப் பத்திரிகையின் நிருபர் சேஷாச்சாரியார் என்பவர், சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிட்டதும் அதற்கு சாரங்கதரன் இணங்கியதும் தவறு என்று தன் பத்திரிகையில் எழுதினார்.— நான் எழுதியிருக்கும் நாடகப் புத்தகத்தைப் படித்துப் பார்த்திருப்பார்களாயின் இதில் அவர் கூறியபடி தவறு ஒன்றுமில்லை என்று நன்கு அறிவார்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்
தொடர்புடைய சுட்டிகள்:

விக்கி குறிப்பு

ஹிந்து தினசரியில் எஸ். முத்தையா எழுதிய கட்டுரை

மனோகரா திரைப்படம்

சபாபதி திரைப்படம்

டோண்டு எழுதிய ஒரு பதிவு

Sunday, 14 October 2012

விவசாயத்தினை காக்கப்போவது யார்?

விவாசாயம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.இது பற்றி யார் கவலைப் படுகிறார்களோ இல்லையோ வேளாண்மை செய்து வந்த நமது குலத்திற்கு ஒரு முக்கிய பொறுப்பு இருக்கிறது;அது விவசாயத்தினை காக்கும் பொறுப்பு.

Friday, 28 September 2012

Monday, 24 September 2012

வளமான வாழ்விற்கு வழிகள் பத்து!

வளமான வாழ்விற்கு வழிகள் பத்து!:


முதுமை என்றாலே தள்ளாத வயது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. முதுமையோடு முடியாமையை இணைத்தே அவர்கள் பார்க்கிறார்கள். முதுமை என்றால் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதும் மன அமைதி இல்லாமல் இருப்பதும் தவிர்க்க முடியாதவை என்று எண்ணுகிறார்கள். ஆனால் நூறாவது பிறந்த நாளை சென்ற வருடம் அக்டோபர் நான்காம் தேதி கண்டு நூற்றி ஒன்றாவது பிறந்த நாளை அடுத்த மாதம் கொண்டாட இருக்கும் ஒரு ஜப்பானிய டாக்டர் இன்றும் தன் மருத்துவத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறார், இப்போதும் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார், உலக நாடுகளுக்குப் பயணித்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

அந்த டாக்டரின் பெயர் டாக்டர் ஷிகிகி ஹினோஹரோ (Dr. Shigeaki Hinohara). இவர் தன் எழுபத்தைந்தாம் வயதிற்கு மேல் 150 நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த நூல்களில் நீண்ட காலம் வாழ்வதும், நன்றாக வாழ்வதும்’ (Living Long, Living Good) மிகவும் பிரபலமானது. இது பன்னிரண்டு லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. இவர் 75 வயதிற்கும் மேற்பட்ட வயதானவர்களுக்காக “புதிய முதியோர் இயக்கம் (New Old People's Movement) என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இதன் மூலமாக அவர் மக்களை நீண்ட காலம் நலமாய் வாழ உற்சாகப்படுத்தி வருகிறார்.

மனித உடலில் கிட்டத்தட்ட 36000 வித்தியாசமான ஜீன்கள் இருப்பதாகவும் அந்த ஜீன்களை மனிதர்கள் பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். புதிய புதிய துறைகளில் புதிய புதிய முயற்சிகள் மேற்கொண்டு உடலையும் மனதையும் முதியவர்கள் இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் அவர். அது புதிய கலையானாலும் சரி, புதிய விளையாட்டானாலும் சரி புதியவற்றில் உற்சாகமாக ஈடுபடுவதே உடல், மன நலத்திற்கு பேருதவி செய்யும் என்கிறார்.

நூறாண்டு காலத்தையும் தாண்டி வெற்றிகரமாக வாழ்ந்து வரும் அவர் வளமான, நலமான, நீண்ட வாழ்வுக்கு பத்து வழிகளைச் சொல்கிறார். அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1) உற்சாகம் முக்கியம்
உண்பதும், உறங்குவதும் முக்கியமே என்றாலும் அவற்றை விட அதிக முக்கியம் உற்சாகமாக இருப்பது. குழந்தைகள் உற்சாகமாக விளையாடும் போது சாப்பாடு, உறக்கம் மறந்து போய் விளையாடுவது போல அதே உற்சாகத்தை வாழ்க்கையில் உருவாக்கிக் கொண்டால் கண்டிப்பாக நம்முள் ஒரு பெரும் சக்தியை உணர்வோம் என்கிறார் அவர்.

2) எடை கூடாதீர்கள்
உங்கள் எடை கூடிக் கொண்டே போகாமல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள் என்கிறார் அவர். சரியான சத்தான உணவுகளை அளவாக உட்கொள்வதும் வயிற்றுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருப்பதும் சுறுசுறுப்புக்கும் உடல்நலத்திற்கும் வழி வகுக்கும் என்கிறார்.

3) திட்டமிடுங்கள் 
திட்டமிட்டு வாழுங்கள். அதன்படி இயங்குங்கள். தினமும் நல்ல விஷயங்களில் ஈடுபாடுடன் இருந்தால், எதிர்பார்க்க ஏதாவது ஒன்று எப்போதும் இருப்பதுடன் உற்சாகமும் இருக்கும், மனமும் இளமையாக இருக்கும் என்கிறார் அவர்.

4) எதையும் அனுபவித்து செய்யுங்கள்
எதைச் செய்கிறோமோ, அதில் முழு மனதுடன் ஈடுபட்டு அனுபவித்து செய்தோமானால் ஓய்வு பெறும் எண்ணமே எழாது. அறுபது வயது வரை குடும்பத்திற்காக உழைக்கிறவர்கள், அதற்குப் பின் சமூகத்திற்காகவும், மனிதகுலத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்து விட வேண்டும். அதையும் அனுபவித்து செய்தோமானால் நாம் நாலு பேருக்கு உபகாரமாக இருக்கிறோம் என்ற திருப்தியில் தனியொரு சக்தியையும் நிறைவையும் நாம் உணர்வோம் என்கிறார்.

5) பெற்றதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
எத்தனையோ கற்கிறோம் என்றாலும் அதனை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொண்டு உதவும் போது அவர்கள் வாழ்க்கையுடன் சேர்ந்து நம் வாழ்க்கையும் சிறப்புற அமைகிறது என்கிறார். அப்படிப் பகிர்ந்து கொள்ளும் போது நம் அறிவையும் புதுப்பித்துக் கொள்கிறோம் அல்லவா?

6) இயற்கைக்கு வாய்ப்பளியுங்கள்
எல்லா வியாதிகளுக்கும் விஞ்ஞான மருத்துவ உதவியையே நாடாதீர்கள் என்கிறார் இந்த மருத்துவர். விஞ்ஞான மருத்துவத்தில் எல்லைகள் என்றுமே உண்டு என்கிறார் அவர். இயற்கை அழகுடன் இயைந்து வாழ்தல், செல்லப் பிராணிகளுடன் மகிழ்தல், இசையில் ஆழ்தல், போன்றவை உடலோடு மனத்தையும் குணப்படுத்துவன. அதை மருத்துவரும் பரிந்துரைக்க முடியாது, விஞ்ஞான மருந்துகளும் தந்து விட முடியாது என்கிறார்.

7) நடங்கள், படியேறுங்கள்
உடலுக்கு வேலை கொடுத்து உங்கள் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள முடிந்த வரை நடப்பது, லிப்டில் போவதற்கு பதிலாக படியேறிச் செல்வது போன்ற சிறிய சிறிய வேலைகளில் பெரிய பலன் உடலுக்குக் கிடைப்பதாக அவர் சொல்கிறார்.

8) பணம், பொருள்களில் மிதமாக இருங்கள்
உண்மையான சந்தோஷத்தை பணத்தாலோ, சேர்த்து வைக்கும் சொத்துகளாலோ நாம் அடைந்து விட முடியாது என்பதால் அவற்றில் ஒரு அளவான, மிதமான மனோபாவம் இருப்பது நல்லது என்கிறார். அவை முக்கியம் என்பதை மறுக்காத அவர் அவற்றை விட திருப்தி அதிக முக்கியம் என்கிறார்.

9) எதிர்பாராதவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
கோடுபோட்டது போல் போவது வாழ்க்கை அல்ல. எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் எதிர்பாராதவையே அதிகம் நடக்கின்றன. அவை எல்லாமே மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இருப்பதில்லை என்றாலும் அவர்றிலும் ஒரு படிப்பினையைப் பெறுவதும் நம் முன்னேற்றத்திற்காக ஏதாவது விதத்தில் பயன்படுத்திக் கொள்வதும் நம்மை உயர்த்துவதோடு பக்குவப்படுத்தவும் செய்யும் என்கிறார்.

10) எட்ட முடியாத உயரத்தைக் குறிக்கோளாக்குங்கள்
சாதாரணமாக எட்ட முடியாத உயரத்தை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கிப் பயணிக்கும் போது தான் நம்மிடம் உள்ள கூடுதல் திறமைகளை நம்மால் அறிந்து கொள்ள முடியும். நல்ல ரோல் மாடல்ஒருவரையும் வைத்துக் கொள்வது நமக்கு ஊக்கசக்தியாக அமையும் என்று அவர் கூறுகிறார்.

அறுபது வயதில் வாழ்க்கை முடிந்து விடுவதாகவும் பின் சாகும் வரை எப்படியோ வாழ வேண்டும் என்பதாகவும் நினைப்பவர்கள் பலர் இருக்க, நூறிலும் ஒரு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை, அதன் உற்சாகமும் குறைந்து விடுவதில்லை என்கிறார் டாக்டர் ஷிகிகி ஹினோஹரோ. அப்படிச் சொல்பவர் அதை சாதித்தும் காட்டியவர் என்பதால் அவரிடம் இருந்து இவற்றைக் கற்றுக் கொண்டு முடிந்த வரை பின்பற்றினால் நாமும் முதுமையிலும் தளர்ந்து விட மாட்டோம் என்பது நிச்சயம்!.

- என்.கணேசன்

Saturday, 22 September 2012

காந்தியின் திமிர்

காந்தியின் திமிர்:
நண்பர்களே,
என்னுடைய நண்பர் வெங்கடரமணன் கனடாவில் ஒரு லேஸர் விஞ்ஞானியாக இருக்கிறார். தமிழில் சில அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பதினைந்தாண்டுகளுக்கு முன்பு அவர் கணிப்பொறிசார்ந்த ஒரு சொல்லாட்சியை உருவாக்கினார் – கொந்தர். ‘Hacker’ என்ற சொல்லின் தமிழாக்கம் அது. கணிப்பொறி நிரல்களைக் கள்ளத்தனமாக ஊடுருவி உடைப்பவர்கள் இவர்கள். நிரல்களை அழிக்கும் நச்சுநிரலிகளை [வைரஸ்] உருவாக்கிப் பரப்புபவர்கள். உலகம் முழுக்க ஒவ்வொரு வருடமும் இவர்கள் பலலட்சம்கோடி ரூபாய் மதிப்புள்ள கணிப்பொறி நிரல்களைப் பயனற்றுப் போகச்செய்கிறார்கள்.
சாதாரணமாக இவர்களை நாம் ஓர் அழிவுச்சக்தியாகத்தான் பார்ப்போம். கணிப்பொறி நிரல் எழுதுவதை ஒரு தொழிலாகக் கண்டால் இவர்கள் அழிவுச்சக்திகள்தான், சந்தேகமே இல்லை. ஆனால், அதை ஓர் அறிவுச்செயல்பாடாகக் கண்டால் கொந்தர்கள் மிகமிக ஆக்கபூர்வமான பங்களிப்பாளர்கள் என்றார் வெங்கடரமணன்.
ஏனென்றால் அறிவுச்செயல்பாடென்பது ஒரு முரணியக்கம் மூலமே முன்னகர முடியும். ஒரு நேர்நிலை இயக்கத்துக்கு அதேயளவு வீச்சுள்ள எதிர்நிலை இயக்கம் தேவை. அந்த எதிர்ச்சக்திதான் இதை செயலூக்கம் கொண்டதாக ஆக்குகிறது. இது தன் குறைகளைக் களைந்து தன்னை முன்னகர்த்திக்கொள்ளச் செய்கிறது. தன்னைத் தானே தாண்டி அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான சவால்களை உருவாக்குகிறது.
உங்கள் வகுப்பில் உங்களுக்கு சரியான போட்டியாளர் என ஒருவர் இருந்தால் உங்கள் திறமை எத்தனைமடங்கு தீவிரமடைகிறது! மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் போட்டியே இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து முதலிடத்துக்கு வந்தபிறகு, தாங்களே பணம் செலவிட்டு ஒரு போட்டியாளரை உருவாக்கிக் கொண்டு, அந்தப் போட்டியாளரை எதிர்த்துச் செயல்படுவது ஒரு நிர்வாகவியல் தந்திரம். 1992-இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரோஸ் பெரட் [Ross Perot] என்பவரைப்பற்றி வாசித்தபோதுதான் இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டேன். அன்று எனக்குப் பலதளங்களில் ஒரு பெரிய திறப்பாக இருந்தது அந்தச்சேதி.
கொந்தர்கள் என்றால் கொத்திவிடுபவர்கள். பெரிய அணை ஒன்றில் உடைப்பை உருவாக்குபவர்கள். பெரிய சாலை ஒன்றில் பள்ளத்தைத் தோண்டி வைப்பவர்கள். அவர்கள் இதன்மூலம் ஒரு பெரிய அமைப்பை நிலைகுலையச் செய்கிறார்கள். அந்த அமைப்பின் குறைகளை அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள ஓட்டைகளையும் விரிசல்களையும் கண்டுபிடித்து உள்ளே சென்று கொத்திவிடுகிறார்கள்.
விளைவாக அந்த அமைப்பு தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறது. தன் ஒட்டுமொத்த அமைப்பையே அது மறுபரிசீலனை செய்கிறது. தன் வழிமுறைகளை ஆராய்கிறது. தன்னுடைய சிந்தனைப்போக்கை வேறு பல தடங்களில் செலுத்தி புதியபுதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கிறது. தன்னைப் புத்தம் புதியதாக மீட்டு எடுத்துக்கொண்டே இருக்கிறது.
கொந்தர்கள் இல்லாவிட்டால் இன்று நாம் வங்கித்தொழிலுக்கு இணையத்தைப் பயன்படுத்தியிருக்க முடியாது. இருபதாண்டுகளாக கொந்தர்கள் இணையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து உடைத்து சவாலை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு எதிரான செயலாகவே இணையத்தின் எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உருவாகி வந்தன. இப்போதும் கொந்தர்கள் அவ்வப்போது கைவைக்கிறார்கள். உடனே பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் மேம்படுகின்றன.
இன்றுள்ள எல்லா நிரலித்தொழில் வளர்ச்சியிலும் கொந்தர்களின் பங்களிப்புண்டு என்கிறார் வெங்கடரமணன். இன்று பெரிய நிறுவனங்கள் கொந்தர்களை அவர்களே சம்பளம்கொடுத்து உருவாக்குகிறார்கள். தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள, வளர்ந்து முன்செல்ல.
அசல்சிந்தனையாளர்கள் எல்லாருமே ஒருவகை கொந்தர்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான் இதைச் சொல்லவந்தேன். மானுடசிந்தனை என்ற மிகப்பெரிய அமைப்பு பல்லாயிரம் வருடங்களாக இருந்துகொண்டிருக்கிறது. அது ஒரு பெரிய நதி போலத் தன் பாதையை உருவாக்கிக்கொண்டு சுழித்துப்பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அசல்சிந்தனையாளர்கள் என்னும் கொந்தர்கள் அந்த மானுடசிந்தனை என்ற நதியின் கரையை அவ்வப்போது கொந்தி விடுகிறார்கள். விளைவாக நதி நிலைகுலைகிறது. அந்த உடைப்புவழியாகப் பீறிட்டுப் புதிய திசையில் ஓட ஆரம்பிக்கிறது.
அசல்சிந்தனையாளர்கள் நம்மை எப்போதுமே உடைத்துக் கலைக்கிறார்கள். நம்மைக் குழப்பமும் கலக்கமும் அடையச்செய்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் எரிச்சலடையச் செய்கிறார்கள். நாம் நம்பி இருப்பவற்றை அவர்கள் உலுக்குவதனால் உருவாகும் மனக்குலைவு அது.
இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் இளமைப்பருவத்தில் அதிரடியான கருத்துக்கள் மூலம் நம்மைக் கலங்கடிக்கும் பேச்சாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் உண்டு. அவர்கள் அசல்சிந்தனையாளர்கள் அல்ல. காரணம் அவர்கள் அதுவரையிலான மானுட சிந்தனையை எதிர்கொள்ளவில்லை. நமக்கு மானுடசிந்தனையுடன் பெரிய அறிமுகம் இல்லாத காரணத்தால் சில கருத்துக்கள் மூலம் நம்மை அவர்கள் பாதிக்கிறார்கள், அவ்வளவுதான்.
அந்தக்கருத்துக்களை அவர்கள் ஏற்கனவே இருந்த மானுட சிந்தனையின் பெருக்கில் இருந்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு அது தெரிந்திருக்காது, அவ்வளவுதான். அது மனித சிந்தனையின் ஒரு துளி, விவாதத்தில் ஒருபக்கம். அதை மிகைப்படுத்தி ஆணியறைந்து சொன்னால் இளமையில் நாம் நிலைகுலைவோம். நான் சொல்வது அதை அல்ல.
உதாரணமாக, நமக்குச் சின்ன வயதில் கடவுள் பக்தி இருக்கும்போது ஒரு நாத்திகர் கடவுள் மறுப்பு பேசி நம்மைக் குலைக்கலாம். அது ஒருவேளை நமக்கு முக்கியமானதாகவும் இருக்கலாம். ஆனால் அது அசல்சிந்தனையே அல்ல. ஏனென்றால் நாத்திகம் என்றும் இருந்துகொண்டிருக்கும் சிந்தனை. புதியதல்ல.
ஆனால் அசல்சிந்தனையாளன் புத்தம்புதியதாக ஒன்றைச் சொல்கிறான். அதுவரை மனிதசிந்தனையில் இல்லாத ஒன்றாக அது இருக்கலாம். அல்லது அதுவரை இருந்த ஒரு விதை முளைத்து வந்ததாக இருக்கலாம். அல்லது இருந்த ஒன்றின் புத்தம்புதிய வடிவமாக இருக்கலாம். ஆனால் அவன் ஒரு புதிய கொந்தலைச் செய்கிறான். நம் சிந்தனையில் அல்ல, மனித சிந்தனையில்.
அப்படிப்பட்ட அசல் சிந்தனையாளர்களில் ஒருவர் காந்தி. இருபதாம் நூற்றாண்டின் மகத்தான முதற்சிந்தனையாளராகவே எப்போதும் அவர் கருதப்படுகிறார். உலகம் முழுக்க. அவர் வாழ்ந்த போதும் சரி, மறைந்தபின் இந்த முக்கால் நூற்றாண்டுக்காலத்திலும் சரி, ஒவ்வொருநாளும் பல கோணங்களில் விவாதிக்கப்படும் மாபெரும் முதற்சிந்தனையாளர் காந்தி. காந்தியின் சிந்தனைகளின் ஒவ்வொரு துளியும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த உலக சிந்தனையாளர்களால் மிகத்தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
காந்தியைப்பற்றி எவ்வளவோ வாசித்து, பேசியிருக்கிறேன். இன்றைய காந்தி என்றபேரில் ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. இன்னும் ஒரு நூல் அளவுக்குத் தொகுக்கப்படாத கட்டுரைகள் இருக்கின்றன. ஆனாலும் அனேகமாக தினமும் காந்தியை எங்கோ ஒரு இடத்தில் புத்தம்புதிதாகக் கண்டுகொண்டிருக்கிறேன். சில சமயம் விசித்திரமாக, சிலசமயம் விபரீதமான கோணத்தில் எல்லாம் காந்தி நம் சிந்தனைக்குத் தோற்றமளிப்பார்.
இது அசல் சிந்தனையின் ஒரு இயல்பு. அது நம்முடைய மூளை என்னும் வைக்கோல்போருக்குள் ஒரு சிறு தீப்பொறியைப் போட்டுவிடுகிறது. நம் மூளை என்னும் பாலையில் விதைகளை வீசி விடுகிறது. எங்கோ எப்போதோ சிறு காற்று கிடைத்தால் கொஞ்சம் நீர் கிடைத்தால் அது முளைக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் அசல்சிந்தனையாளர்கள் என நான் நினைக்கும் பலர் எனக்கு இப்படித்தான் அனுபவமாகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பவே முடிவதில்லை.
எனக்கு தல்ஸ்தோய் அப்படிப்பட்டவர். நான் இருபதாண்டுகளாக அவரிடமிருந்து தப்ப முயன்றுகொண்டிருப்பவன். ஹென்றி தோரோ அப்படிப்பட்டவர். அதற்கு முன் நீட்சேயும் ஹெகலும் அப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் எனக்கு தங்கள் சிந்தனைகளைத் தரவில்லை. நானே சிந்திப்பதற்கான கட்டாயங்களைத் தந்தார்கள். சிந்திக்காமல், என்னை நானே மீட்டுக் கட்டிக்கொள்ளாமல், முன்னகர முடியாது என்ற நிலையை உருவாக்கினார்கள். அந்தக் கட்டாயம் பலசமயம் எரிச்சலூட்டுவது. பலசமயம் பொறுமை இழக்கச்செய்வது.
அசல்சிந்தனையாளர்களின் இயல்பை நான் இப்படிச்சொல்கிறேன். அவர்களின் சிந்தனையில் ஒருபகுதி நம்மை மனக்கிளர்ச்சி அடையச்செய்யும். பெரும் கனவுகளையும் இலட்சியங்களையும் நம்முள் நிறைக்கும். இன்னொருபகுதி நம்முள் இருக்கும் சிந்தனைகளை உடைத்துச் சிதறடித்து நம்மை வெறுமையில் கொண்டு சென்று விடும். அந்தத் துண்டுகளைப் பொறுக்கி நாமே நம் அகத்தைத் திரும்பக் கட்டி எழுப்பவேண்டும்.
அசல்சிந்தனையாளர்களின் சிந்தனைகளில் ஒரு பகுதி நமக்கு கேனத்தனமாகத் தோன்றும். பொருத்தமற்றதாகவும் முட்டாள்தனமாகவும் வெற்றுப்பிடிவாதமாகவும் தோன்றும். இன்னொரு பகுதி நமக்குக் கொஞ்சம் கூடப் புரியாததாக இருக்கும். வெறும் உளறலா என்றுகூடத் தோன்றும். இதற்கு விதிவிலக்கான அசல்சிந்தனையாளர்களே இல்லை.
இந்த அம்சம்தான் அந்தச் சிந்தனையாளரை நாம் எளிதில் தாண்டிவிட முடியாதபடி செய்கிறது. ‘இதென்னடா இது’ என்று நாமே அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். பல கோணங்களில் அதைப் பரிசீலிக்கிறோம். அதாவது நமக்குள் அவர்களின் சிந்தனைகளில் ஒருபகுதி செரிக்காமல் இருந்துகொண்டே இருக்கிறது. நம் மனம் அந்தச் சிந்தனைகளை செரிக்கப் போராடிக்கொண்டே இருக்கிறது.
காந்தியிடம் இந்த இயல்பு உண்டு. காந்தியைப்பற்றிப் பேசும்போது என்னிடம் காந்தியவாதியும் மாபெரும் கட்டிடக்கலைஞருமான லாரி பேகர் சொன்னார் ‘அவருக்கு எரிச்சலூட்டுவதில் பெரிய ஆனந்தம் உண்டு. நாம் எரிச்சல் கொண்டால் அவர் முகத்தில் ஒரு புன்னகை வரும்.’
பின்பொருமுறை காந்திகிராம நிறுவனரான ராமச்சந்திரன் சொன்னார் ‘அனேகமாக காந்தியின் எல்லா சீடர்களும் காந்திமீது ஒருபோதாவது கடும் கோபம் அடைந்திருப்பார்கள். அவர் முன் கணக்குகளை வீசி எறிந்துவிட்டு இனிமேல் உங்கள் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிக் கிளம்பிச்சென்றவர்கள் பலரை எனக்குத் தெரியும். அவர்களெல்லாம் திரும்பியும் வந்திருக்கிறார்கள். நானும் ஒருமுறை அவரை நிராகரித்துவிட்டு சபர்மதியில் இருந்து கிளம்பி வந்தேன்.’
காந்தியிடம் இருந்த அந்த அம்சம் என்ன? அவரை அணுகிய எவருமே நிம்மதியாக இருந்ததில்லை. அவர்களை காந்தி கலைத்துக்கொண்டே இருந்தார். அவர் வாழ்ந்தபோது அவரது சமூகத்துக்கும் அவரது சூழலுக்கும் மிகப்பெரிய தொந்தரவாக இருந்தார். ஒருகட்டத்தில் அடிப்படைவாதிகள் அவரைக் கொல்வதற்கும் அவர் அளித்த எரிச்சல்தான் காரணம்.
அகமதாபாத் அருகே சபர்மதி ஆசிரமத்தை காந்தி அமைத்தார். அன்றைய குஜராத் சாதிவெறியில் ஊறிய பழைமைவாத நகரம். அங்கே தன் ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டார், அவர்கள் உள்ளிட்ட அனைவரும் அனைவர் உணவையும் சமைக்கவும் அனைத்துக் கழிப்பறைகளையும் சுத்தம்செய்யவும் சொன்னார். சரி, அது அவரது கொள்கை. ஆனால் ஆசார இந்துக்கள் ஆசிரமத்துக்கு நன்கொடை தரவேண்டும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.
காந்தி எழுதுகிறார், இந்த ஆசிரமம் இந்துக்களை சீர்திருத்தும் நோக்கம் கொண்டது. ஆகவே இந்துக்கள்தான் இதற்குப் பணம்தரவேண்டும். அது அவர்களின் கடமை. அவர்கள் தராவிட்டால்? பட்டினிகிடந்து சாகவேண்டும், அவ்வளவுதான். என்னதான் எரிச்சலூட்டினாலும் கண்ணெதிரே ஒரு சாத்வீக கும்பல் பட்டினி கிடப்பதை சகிக்க முடியாமல் வேறுவழியில்லாமல் அதே குஜராத் ஆசாரவாத இந்து சமூகம் அவருக்கு நிதி கொடுத்தது. அதை மகிழ்ச்சியுடன் தன் சுயசரிதையில் காந்தி பதிவுசெய்கிறார்.
இதுதான் திமிர்! நான் இதை அறத்திமிர் என்பேன். ஞானத்திமிர் என்பேன். இந்தத் திமிர்தான் அவரது உயிரைப் பறித்தது. நண்பர்களே, புனிதமான திமிர் இது. சிந்தனையாளன் ஒருவன் தன் ஆன்மாவை நெருப்பாக எரித்துப் பேணிக்கொள்ளவேண்டிய திமிர் இது. இன்று காந்தியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது இதுதான்.
நீங்கள் பெரும்பாலும் காந்தியை ஒரு சிந்தனையாளராக அறிந்திருக்க மாட்டீர்கள். அவரது அரசியல் போராட்டம் பற்றிய ஒரு பள்ளிக்கூட பாடப்புத்தகம் சார்ந்த அறிமுகம் மட்டும்தான் உங்களிடம் இருக்கும். அதை வைத்தே அவர்மீதான எல்லா விமர்சனங்களையும் உருவாக்கியிருப்பீர்கள். காந்தி கிட்டத்தட்ட எழுபதாயிரம் பக்கங்கள் எழுதியவர். உலக சிந்தனையாளர்களில் மிக அதிகமாக எழுதியவர்களில் ஒருவர்.
காந்தியின் சிந்தனைகள் அரசியல் மதம் சமூகம் போன்ற தளங்களில் மட்டுமல்லாமல் இலக்கியம், கட்டிடக்கலை, மருத்துவம் என பலதளங்களில் பரவிக்கிடக்கின்றன. இன்றைய நூற்றாண்டின் மையச்சிந்தனையோட்டமாக உள்ள சூழியல், தாக்குப்பிடிக்கும் பொருளியல், இயற்கைவேளாண்மை ஆகியவற்றுக்கான அடிப்படைகளை அமைத்த முன்னோடி அவர். இத்தனைக்கும் அப்பால் அவரை நாம் மீண்டும் மீண்டும் புதிய தளங்களில் கண்டுபிடித்தபடியே இருக்கலாம்.
காந்தியின் சிந்தனைகளை சுருக்கமாக உங்களுக்குச் சொல்வது என்னுடைய நோக்கம் அல்ல. ஏனென்றால் அது எப்போதுமே அவரைத் தவறாகப் புரிந்துகொள்ளவே வழிவகுக்கும். எந்தச் சிந்தனையாளரையும் அவரது சிந்தனைகளை நேரடியாக வாசித்துப் பொருள்கொள்வதே சரியானதாகும்.
நான் சொல்ல வருவது, காந்தி நம்முடைய காலகட்டத்தின் சிந்தனையின் ஒட்டுமொத்த அமைப்பில் உருவாக்கும் ‘கொந்தல்’களைப்பற்றி. அந்தக்கொந்தல்களை அவர் செய்யக் காரணமானது என்ன? நான் சிந்திக்கிறேன், என்னுடைய சிந்தனையில் இதுவே சரி என்ற ஆன்மீகமான திமிர்தான் இல்லையா?
ஒட்டுமொத்த மானுடச்சிந்தனைக்கும் மறுபக்கமாக, ஒட்டுமொத்த சமகாலச் சிந்தனைக்கும் எதிர்விசையாக தன்னை நிறுத்திக்கொள்ளத் தூண்டுவது இந்தத் திமிர்தான். இந்தத் திமிர் இருந்தமையால்தான் காந்தி அடக்கத்தின் உருவாக இருந்தார். நாம் எதில் எல்லாம் அகங்காரம் கொள்கிறோமோ அனைத்தையும் அவர் துறந்தார். எங்கும் எவர் முன்னும் தணியவும் பணியவும் தயாராக இருந்தார். ஆனால் மானுட வரலாற்றின் முன்னால் மட்டும் நிமிர்ந்து நின்றார்.
காந்தியின் அந்தப் புனிதமான திமிரை அவரது ஒவ்வொரு செயலிலும் நாம் காணலாம். ஒருமுறை வைஸ்ராயுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் நேரத்தில் காந்தி தலைக்குக் களிமண் பத்து போட்டிருந்தார். அவரே அவருக்குச் செய்துகொண்ட சிகிழ்ச்சைமுறைகள் அவை. அந்தக் களிமண் பத்துடன் கிளம்பி வைஸ்ராய் மாளிகைக்குச் சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.
விசித்திரமாகத் தோன்றலாம். அதிலும் ஒரு சரியான டை கட்டாவிட்டால் வெள்ளைக்காரன் நம்மைப்பற்றி என்ன நினைப்பான் என்றே எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையில் இது கிறுக்குத்தனமாகவே தோன்றலாம். ஆனால் நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த இந்தியத்தலைவரை விடவும் வெள்ளையர்களின் சம்பிரதாயங்களை அறிந்தவர் காந்தி. அவரது அந்தச்செய்கைக்குப்பின்னால் உள்ளது அபாரமான ஒரு சுய உணர்வு.
‘நான் காந்தி. இந்த நாட்டின் கோடானுகோடி மக்களின் பிரதிநிதி. நான் நீ நினைக்கும்படி வரமுடியாது. நான் நினைக்கும்படித்தான் இருப்பேன்’ என்ற பிரக்ஞை அளித்த தன்னம்பிக்கை அது. ‘என்னுடைய சிந்தனைகளும் என் வழிமுறைகளும் உன்னுடைய அங்கீகாரத்தால் நிலை நிற்பவை அல்ல. அவற்றுக்குச் சொந்தமாக வரலாறுண்டு’ என்னும் சவால் அது.
ஆச்சரியம் என்னவென்றால் பிரிட்டிஷ்காரர்களின் எல்லா ஆசாரமரியாதைகளையும் பயபக்தியுடன் கடைப்பிடித்த இந்தியத்தலைவர்களை பிரிட்டிஷார் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர்கள் காந்தியை மட்டுமே மதித்தார்கள். இன்று அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் மற்றும் ராஜதந்திரிகளின் அந்தரங்கக் குறிப்புகள் பிரசுரமாகின்றன. அவையெல்லாம் அவர்கள் காந்தி மீது கொண்டிருந்த மதிப்பையே காட்டுகின்றன.
அந்தத் திமிரை சிந்தனையின் தற்சார்பு என்று நான் வரையறை செய்வேன். காந்தியை காந்தியாக்கியது அதுவே. காந்தியின் எல்லா சிந்தனைகளையும் புரிந்துகொள்வதற்கான முதல் தொடக்கமாக இருக்கவேண்டியது அவரது இந்தத் தற்சார்பைப்பற்றிய நம் புரிதலே.
இன்றைய உலகச்சூழலில் நீங்கள் உங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றால் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடமே இதுதான். நீங்கள் வழிநடத்துபவரா பின்பற்றுபவரா என்ற கேள்விதான் முதன்மையானது. பின்பற்றுபவர் என்றால் விட்டுவிடுங்கள். உங்களை நோக்கி நான் பேசவில்லை. வழிநடத்துபவர் என்றால் முதன்மையாக உங்களுக்கு வேண்டிய தகுதியே இதுதான்.
இன்று உலகிலுள்ள கோடானு கோடிபேர், இந்தியாவிலும் சீனாவிலும், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பலகோடி இளைஞர்கள் கிட்டத்தட்ட ஒரே கல்வியைக் கற்கிறார்கள். ஒரேவகையான உலகப்புரிதலை அந்தக் கல்வி அவர்களுக்கு அளிக்கிறது. அந்தப் பிரம்மாண்டமான தொழிற்சாலையில் இருந்து ஒரே வகையான உற்பத்திப் பொருட்களாக வெளியே வருகின்றனர். நீங்களும் அதில் ஒருவர். உங்களுக்கென எந்த சுயசிந்தனையும் இருப்பதில்லை. சுய அடையாளமும் இருப்பதில்லை.
உண்மையில் நீங்கள் சுயமாகச் சிந்திப்பதாக நினைப்பதெல்லாம் அதேபோல கிட்டத்தட்ட அதே சொற்களில் உலகம் முழுக்க மற்ற அத்தனை பேரும் நினைப்பதுதான். நேரமிருந்தால் இணையத்தில் தேடிப்பாருங்கள்: நீங்கள் நினைப்பதை எல்லாம் எல்லாருமே சொல்லிக்கொண்டிருப்பார்கள். கருத்துக்கள் மட்டும் அல்ல. உணர்ச்சிகள் கலாய்ப்புகள், நக்கல்கள் கூட உலகம் முழுக்க ஒரேமாதிரி இருக்கின்றன.
ஆனால் நீங்கள் அந்தப் பொதுமையை மீறி உங்களுக்கென எதையாவது உருவாக்கிக் கொண்டால் அதுதான் உங்கள் சுயம். அப்படி உருவாக்கிக்கொண்ட சுய அடையாளம் மூலமே நீங்கள் உங்களால் மட்டுமே இந்த சமூகத்துக்குக் கொடுக்கவேண்டிய பங்களிப்பைக் கொடுக்கமுடியும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே சமூகத்தில் உங்களுக்கான இடம் உருவாகும். நீங்கள் கணிப்பொறி நிபுணராக இருக்கலாம். தொழில்முனைவோராக இருக்கலாம். எழுத்தாளராக இருக்கலாம். யாராக இருந்தாலும் இதுதான் விதி.
காந்தி முறையான உயர்தரக் கல்வியைப் பெற்றவர். அவரது காலகட்டத்தில் கிடைக்கும் மிக உச்சகட்டக் கல்வி அது. அந்தக்கல்வியைக் கற்ற அனைவருமே செல்லக்கூடிய ஒரு பொதுவழி உண்டு. ஐரோப்பியச் சிந்தனை, ஐரோப்பிய நாகரீகம் ஆகியவற்றை மானுடத்தின் உச்சகட்ட சாதனையாக நினைப்பது. உலகமே பின்பற்றியாகவேண்டிய முன்னுதாரணமாக நினைப்பது. உலகத்தை முழுக்க அதனடிப்படையில் மாற்றியமைக்க முயல்வது.
அந்தப் பொதுப்போக்கில் காந்தி இணையவே இல்லை. காந்தியை காந்தியாக ஆக்கியது அந்தப் பிடிவாதமான தற்சார்புதான். அவரைப்போல ஐரோப்பியக் கல்வி கற்ற அத்தனைபேரும் நவீன ஐரோப்பியப் பண்பாட்டை அறிமுகம் செய்துகொண்டதுமே அவர்களின் அதுவரையிலான வளர்ப்பில் இருந்து பெற்றுக்கொண்ட எல்லாவற்றையும் தூக்கி வீசினார்கள். புதியதாகக் கல்லூரிக்கு வேட்டியுடன் படிக்க வரும் கிராமத்து மாணவன் அடுத்த வாரமே கிழிந்த ஜீன்ஸ் போட்டு ஒற்றைக்கம்மல் அணிந்துகொண்டு வருகிறானே அதைப்போல.
காந்தி அதைச் செய்யவில்லை. அவர் அவருக்கு அவருடைய இளமைப்பருவத்தில் இருந்தும் அவர் வாழ்ந்த சூழலில் இருந்தும் கிடைத்த பண்பாட்டையும் சிந்தனைகளையும் கைவிட மறுத்தார். கைவிடவேண்டும் என்றால் உரிய முறையில் என்னை நீங்கள் அவை பிழை என்று ஏற்கச்செய்யவேண்டும் என்றார். ‘நான் ஒரு கீழைநாட்டவன், ஓர் இந்தியன், ஓர் இந்து. எனக்கென்று பல்லாயிரம் வருடப் பழைமைகொண்ட ஒரு பண்பாட்டுமரபு இருக்கிறது. அதில் பிறந்து வளர்ந்த நான் இதுவரையிலான என் சொந்தவாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்ட பல விஷயங்கள் உள்ளன. நான் அவற்றைக் கைவிடவேண்டுமென்றால் எனக்கு அவற்றின் குறைபாடுகளை நீங்கள் ஐயம்திரிபற விளக்கவேண்டும். அவற்றைவிட மேலான ஒன்றை அளிக்கவேண்டும்’ என்று அவர் அடம்பிடித்தார்.
காந்தியின் சுயசரிதை முழுக்க அவரிடம் இந்தப் பிடிவாதம் இருப்பதைக் காணலாம். சைவ உணவுப்பழக்கம், சாதிமுறை எல்லாவற்றைப்பற்றியும் அவர் இதேபோன்ற உறுதியான முடிவுடன் இருக்கிறார். அன்று லண்டனுக்கு வரும் ஒரு இந்தியர் பத்தே நாளில் சைவ உணவைக் கைவிடுவார். இந்தியச்சாதிமுறை, மதநம்பிக்கைகள் ஆகியவற்றை நிராகரித்துப் பேச ஆரம்பிப்பார். ஊர்திரும்பினாலும் அவர் லண்டன்வாசியாகவே பேசிக்கொண்டிருப்பார். ஆனால் சொந்தவாழ்க்கையில் அந்தப் பேச்சின் எந்தச் சாயலும் இருக்காது.
ஆனால் காந்தி அசைவ உணவு உண்டால்தான் நன்றாக வாழமுடியும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை என்று அனைவரிடமும் வாதிட்டார். கிட்டத்தட்ட உயிரைப்பணயம் வைத்து சைவ உணவை உண்டார். அதேபோல இந்தியச் சாதியமைப்பு முழுக்க முழுக்க அநீதியின்மீது கட்டப்பட்டதாக இருக்க நியாயமில்லை, அப்படியென்றால் அது இத்தனைநாள் நீடித்திருக்காது, அதற்கு ஒரு பொருளாதாரப் பங்களிப்பு இருக்கும் என்று சொன்னார்.
தன்னுடைய சொந்த அனுபவத்துக்குள், தன்னுடைய மரபுக்குள் செல்லுபடியாகக்கூடிய சிந்தனைகள் மட்டுமே தனக்குத்தேவை என கறாராக இருந்தார் காந்தி. ஆனால் மூர்க்கமான பழைமைவாதியாக இருக்கவும் இல்லை. தன்னை ஒரு சிந்தனை ஏற்றுக்கொள்ளச் செய்தால் அதை முழுமூச்சுடன் ஏற்றுக்கொள்ளவும் அதை கடைசிவரை தீர்க்கமாகப் பின்பற்றவும் அவர் தயங்கவில்லை. உதாரணமாக, அவரால் கடைசிவரை அசைவ உணவுப்பழக்கத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் இந்தியச் சாதியமைப்பு முழுக்கமுழுக்க தீங்கானது, தேவையற்றது, ஒழிக்கப்படவேண்டியது என்ற முடிவுக்கு வந்தார். அதை சொந்தவாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் பின்பற்றினார்.
இதுதான் தற்சார்பு. காந்தியின் எல்லாச் சிந்தனைகளையும் இந்த அம்சம் தீர்மானிக்கிறது. உலகமே ஒன்றைச் சிந்தித்தாலும் காந்தி அதை ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதில்லை. ‘அனைவருமே இதைத்தான் சொல்கிறார்கள். என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உலகம் என்ன சொன்னாலும் நான் என் அந்தராத்மா சொன்னபடித்தான் நடப்பேன்’ என்ற வரியை காந்தியின் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் காணலாம்.
காந்தியின் காலகட்டத்தில் உலகம் முழுக்க ஓங்கியிருந்த இரண்டு நம்பிக்கைகள் என்றால் ஒன்று தொழில்நுட்பம் உலகத்தைக் காப்பாற்றும் என்ற எண்ணம்,இரண்டு, சமூக மாற்றத்துக்கு வன்முறை இன்றியமையாதது என்ற எண்ணம். இன்றும்கூட நம்மில் மேலோட்டமாக சிந்திப்பவர்களிடமிருப்பது இந்த நம்பிக்கைகள்தான்.
காந்தி இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் அதன் அதிதீவிர வளர்ச்சியைக் கண்டுகொண்டிருந்த லண்டனில் வாழ்ந்தவர். அன்று லண்டனுக்குச் செல்பவர்கள் எல்லாருமே அந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டு பிரமித்து அது இன்னும் சில வருடங்களில் உலகுக்கே சோறும் சமாதானமும் கொண்டுவரும் என்று நம்பினார்கள். காந்தியின் முதல்சீடரான நேருவே அந்த நம்பிக்கைதான் கொண்டிருந்தார், கடைசிவரை.
ஆனால் காந்தி தொழில்நுட்பம் வெறும் கருவிதான் என்று நினைத்தார். அந்தக்கருவி யாரால் எதற்குப் பயன்படுத்தப்படுகிறதென்பதே முக்கியமானது. அந்த உயர்தொழில்நுட்பம் தொழிலாளர்களை மிருகங்களிலும் கீழான அடிமைவாழ்க்கை வாழ்வதற்கே கொண்டு செல்கிறது என்பதை அவர் கவனித்தார். நவீனத்தொழில்நுட்பம் உலகிலுள்ள ஆதிக்கசக்திகளுக்கு இன்னும் அதிகமான ஆயுதவலிமையை அளிக்கும் என்றும் உலகளாவிய சுரண்டலை இன்னும் அதிகரிக்கும் என்றும் அவர் கணித்தார்.
தொழில்நுட்பம் பெருந்தொழில்களை உருவாக்குகிறது. பெருந்தொழில் பெரும் லாபவெறியை உருவாக்குகிறது. லாபவெறி மிதமிஞ்சிய நுகர்வை கட்டி எழுப்புகிறது. மிதமிஞ்சிய நுகர்வு இயற்கையை அழித்து மனிதனை அழிவுக்குக் கொண்டு செல்கிறது என்று காந்தி வாதாடினார்.
1909-லேயே காந்தி தன்னுடைய ஹிந்து சுயராஜ்யம் என்ற நூலில் இந்தச் சிந்தனைகளை முன்வைத்திருந்தார். அன்று உலகில் எங்கும் சூழியல் என்ற சிந்தனை வரவில்லை. தாக்குப்பிடிக்கும் பொருளியலை எவரும் அறிந்திருக்கவில்லை. இயற்கைச்சமநிலை பற்றிய எண்ணமே இருக்கவில்லை.
மாறாக இயற்கையை ஒரு அடிமையாகவே அன்றைய சிந்தனையாளர்கள் நினைத்தார்கள். இயற்கையை ஒட்டச்சுரண்டி மனிதன் தன் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். இயற்கை மனிதனுக்காகவே என்று வாதிட்டார்கள். நுகர்வே மனிதனின் இன்பம் என்றார்கள். அதிக நுகர்வே வளர்ச்சி என்று வகுத்தார்கள். மார்க்ஸிய சிந்தனையின் சாராம்சமே இந்த மனிதமைய வாதம்தான். உலகின் பெரும்பாலான இயற்கை வளத்தை அழித்தவை, அழித்துக்கொண்டிருப்பவை மார்க்ஸிய சிந்தனையின் அடிப்படையில் அமைந்த அரசுகளே.
நூறாண்டுகளுக்கு முன் ‘வளர்ச்சி’ என்றாலே தொழில்நுட்ப வளர்ச்சி என்றுதான் உலகமெங்கும் நம்பப்பட்டது. அதாவது இயற்கை என்ற சக்தியை மனிதன் வெல்வதே வளர்ச்சி. இயற்கைச்சக்திகளுடன் மனிதன் போர் செய்வதை அன்றைய இலக்கியமும் தத்துவமும் கொண்டாடின.
அச்சூழலில் காந்தி எப்படி அணுகப்பட்டிருப்பார். யோசித்துப்பாருங்கள். அவர் ஒரு பழைமைவாதியாக, நவீன உலகத்தைப் புரிந்துகொள்ளாத கிறுக்கராக எண்ணப்பட்டார். காந்தியைச் சுற்றி இருந்த ஐரோப்பியக்கல்வி பெற்ற அரசியலாளர்கள் காந்தியின் அபாரமான மக்கள்செல்வாக்கைக் கண்டுதான் அவருடன் இருந்தார்கள். உள்ளூர அவர்கள் அந்த அரைநிர்வாணக் கிழவருக்கு நவீன சிந்தனைகள் புரியவில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள்.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் உலகின் கண்கள் திறந்தன. நவீனத்தொழில்நுட்பத்தின் அழிவுத்தன்மையைப்பற்றிய எண்ணம் உலகமெங்கும் உருவாயிற்று. அது ஒரு ஆக்கசக்தி என்ற எண்ணம் மறைந்தது. அதன்பிறகுதான் உலகம் மெல்ல மெல்ல காந்தியை நோக்கி வர ஆரம்பித்தது. அப்போது காந்தி இல்லை, அவரது சிந்தனைகள் மட்டும்தான் இருந்தன.
காந்தி தொழில்நுட்பம் பற்றியும், இயற்கையின் சமநிலை பற்றியும், தாக்குப்பிடிக்கும் உற்பத்திமுறை பற்றியும் பேசிய விஷயங்களை நவீன ஐரோப்பியச் சிந்தனையின் மொழியைப் பயன்படுத்தி விரிவாக விளக்கியவர் என்று பிரிட்டிஷ் பொருளியலாளரான இ.எஃப்.ஷுமாக்கர் [E.F.Schumacher]-ஐச் சொல்லலாம். அவரது சிந்தனைகள் வழியாக ஐரோப்பா முழுக்க நவீனத் தொழில்நுட்பமும் லாபவெறியும் உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் என்ற விழிப்புணர்வு உருவாக ஆரம்பித்தது.
அதன்பின் பல சிந்தனையாளர்களைச் சொல்லமுடியும். நான் முக்கியமாக அமெரிக்கச் சிந்தனையாளரான இவான் இலியிச்சைச் சுட்டிக்காட்டுவேன். ஷுமாக்கரும் இவான் இலியிச்சும் இந்தியாவுக்கு வந்து, ஏன் தமிழ்நாட்டுக்கு வந்து, மதுரையில் காந்திகிராமத்திலும் டி.கல்லுப்பட்டியில் ஜெ.சி.குமரப்பாவுடனும் தங்கி காந்தியைப்பற்றி ஆராய்ந்தவர்கள். இங்கிருந்து சென்று உலகை நோக்கிப் பேசியவர்கள். நாம் அப்போது காந்தியைப் பழைய கிழவர் என்று ஒதுக்கிவிட்டு ஐரோப்பிய நவீனத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வதில் தீவிரமாக இருந்தோம்.
இன்று உலகம் முழுக்க உள்ள பசுமை இயக்கங்களின் பிதா காந்திதான். அவரே விதை. இன்றைய உலகின் சிந்தனை என்று எதையாவது சொல்லமுடிந்தால் அது சூழியல்தான். டேவிட் அட்டன்பரோவின் இயற்கைபற்றிய ஆவணப்படங்களைப் பார்க்காதவர்கள் உங்களில் சிலரே. அவர் தன் ஆவணப்படங்கள் வழியாக முன்வைப்பவை ஐரோப்பிய பசுமைச்சிந்தனைகளைத்தான். அவை நம்மிடமிருந்து, காந்தியிடமிருந்து சென்றவை.
காந்தியின் சிந்தனைகள் 1972-இல் ஸ்டாக்ஹோம் சூழியல் மாநாட்டுக்குப் பின்னர்தான் உலகமெங்கும் சூழியலாளர்களால் இன்னும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப்பட்டன. ஆம், காந்தி 1909-இல் சொன்னவை அரைநூற்றாண்டுக்குப் பின்னரே உலகத்தால் உணரப்பட்டன.
காந்தி நவீன காலகட்டத்தில் வன்முறைமூலம் சமூகமாற்றமோ ஆட்சிமாற்றமோ வரமுடியாதென்று நினைத்தார். வன்முறை அதற்குச் சமானமான எதிர்வன்முறையைத்தான் உருவாக்கும் என்று சொன்னார். வன்முறை எதற்காக யாரால் ஆரம்பிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக அழிவுதான் மிஞ்சும், அதுவும் எளிய மக்களுக்கு அழிவுதான் கிடைக்கும் என்பதே காந்திய தரிசனம்.
ஆகவேதான் காந்தி முன்வைத்த மக்கள்போராட்டம் என்பது அகிம்சை வழியிலானதாக இருந்தது. அகிம்சை [வன்முறையின்மை] என்பது காந்திய சிந்தனைகளின் அடிப்படை. காந்தியின் காலகட்டத்தில் உலகமே ஆயுதப்புரட்சியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. உலகின் மிகப்பெரும்பாலான நாடுகளில் ஆட்சிமாற்றத்துக்கான வன்முறைக் கிளர்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருந்தன.
ஆனால் காந்தி பிடிவாதமாக சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு சமூகத்தில் உள்ள அதிகாரம் அதன் அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தை மாற்றினால் ஒன்றும் ஆகப்போவதில்லை. மாற்றவேண்டியது மக்களை. மக்கள் கருத்து மாறினால் இயல்பாகவே ஆட்சியும் அதிகாரமும் மாறும். அதுவே உண்மையான மாற்றம். அந்த மாற்றமே நீடிக்கும். பிற மாற்றங்கள் எல்லாமே அழிவைத்தான் உருவாக்கும்.
காரணம் அந்தமாற்றம் மக்களில் ஒரு சிறுபான்மையினர் அரசாங்கத்தை எதிர்த்துச் செய்யும் போராகவே இருக்கும். அவர்கள் வென்றால் அவர்கள் இன்னொரு அரசாங்கமாக ஆவார்கள். மக்கள் அப்போதும் அடிமைகளாகவே இருப்பார்கள்.
ஜனநாயக யுகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்றார் காந்தி. மக்கள் போராட்டம் என்பது மக்களின் கருத்தைத் திரட்டி அதை ஒருமுகப்படுத்துவதற்கான செயல்பாடு மட்டும்தான். ஒருகுறிப்பிட்ட கருத்தை ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொண்டால் அதன்பின்னர் அந்தச் சமூகம் மாறியே ஆகவேண்டும்.
காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் எல்லாமே இந்திய மக்களை பிரிட்டிஷாருக்கு எதிராக ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள்தான். இந்திய மக்கள் பிரிட்டிஷாரை நம்பி ஆட்சியாளர்களாக ஏற்றிருந்தார்கள். ஆகவேதான் சிறுபான்மையினரான பிரிட்டிஷார் இந்தியாவை ஆளமுடிந்தது. மக்களுக்கு பிரிட்டிஷார் இந்தியாவில் செய்த பெரும் சுரண்டலைப் புரிந்துகொள்ளும் சக்தி இருக்கவில்லை. அந்தச்சுரண்டலால் உலகிலேயே மிகப்பெரும் பஞ்சங்கள் இந்தியாவில் நிகழ்ந்தன. இந்தியாவின் மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் இறந்தனர். அதுவும் மக்களுக்குத் தெரியவில்லை.
காந்தி நடத்திய எல்லாப் போராட்டங்களும் இந்தச் சுரண்டலை மக்கள் மத்தியில் திறந்து வைப்பதற்கான போராட்டங்கள்தான். அன்னியத்துணி துறப்பு, உப்பு சத்யாக்கிரகம் எல்லாமே இந்த நோக்கம் கொண்டவை. மெல்ல மெல்ல மக்கள் பிரிட்டிஷாரைப் புரிந்துகொண்டபோது வேறு வழியே இல்லாமல் அவர்கள் வெளியேற நேர்ந்தது. இப்படித்தான் மக்கள் போராட்டம் நிகழமுடியும்.
அன்றும் பிறகும் வன்முறைப் போராட்டத்தை ஆதரித்தவர்கள் காந்தியை எள்ளி நகையாடினார்கள். அவரை துரோகி என்றும் மக்கள் போராட்டம் நிகழாமல் காட்டிக்கொடுப்பவர் என்றும் வசைபாடினார்கள். அனால் 1950 வாக்கில் ருஷ்யாவில் ஸ்டாலின் நடத்திய வெறியாட்டங்கள் குருஷேவ் வழியாக அதிகாரபூர்வமாக வெளிவர ஆரம்பித்தபோது கொஞ்சம் கொஞ்சமாக வன்முறைப்போராட்டம் பற்றிய நம்பிக்கைகள் உலக சிந்தனையாளர்களிடம் சரிய ஆரம்பித்தன. வன்முறைப்போராட்டம் வழியாக சர்வாதிகாரத்தை மட்டுமே கொண்டுவர முடியும் என்றும் நோயைவிட சிகிழ்ச்சை ஆபத்தானதாக ஆகலாம் என்றும் தெரிய ஆரம்பித்தது.
காந்தி அதன்பின்னரே உலக அளவில் கவனிக்கப்படலானார். வன்முறையற்ற ஜனநாயகப் போராட்டம் பற்றிய அவரது சிந்தனைகள் விவாதிக்கப்பட்டன. பின்னர் எழுபதுகளின் தொடக்கத்தில் இத்தாலிய மார்க்ஸிய சிந்தனையாளரான அண்டோனியோ கிராம்ஷியின் சிந்தனைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அவை ஒரு சமூகத்தின் உண்மையான அதிகாரம் அரசாங்கத்திடம் இல்லை என்று நிறுவின. அந்த அதிகாரம் அந்தச் சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களிடம் உள்ளது. அந்த மக்கள் எதை நம்புகிறார்களோ அந்தக் கருத்துதுதான் அதிகாரமாக ஆகிறது. அதை கிராம்ஷி கருத்தியல் மேலாதிக்கம். [Hegemony] என்கிறார்.
ஆகவே ஒருசமூகத்தில் உண்மையான மாற்றம் ஏற்படவேண்டுமென்றால் அந்த மக்களின் கருத்தியலில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் உண்மையான புரட்சி என்றார் கிராம்ஷி. அவ்வாறு கருத்தியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக நீண்ட கால அளவில் கொஞ்சம் கொஞ்சமாக நடத்தப்படும் போராட்டத்தை அவர் நிலை யுத்தம் [Static war] என்றார். தற்காலிக சமரசம் என்பது அந்த நிலையுத்தத்தின் ஒரு பகுதியே.
கிராம்ஷிக்குப் பின்னர்தான் காந்தியை மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள். இன்று காந்தியம் பற்றி மேலைநாட்டுச் சிந்தனையாளர் எழுதும் கட்டுரைகளில் கிராம்ஷியின் கலைச்சொற்களை நிறையவே காணலாம்.
சென்ற அரைநூற்றாண்டில் உலக அரசியலில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்கள் எல்லாமே காந்தியை ஆதர்சமாகக் கொண்டவர்களால் காந்திய முறையில் அடையப்பட்டவைதான். வன்முறைமூலம் அடையப்பட்ட எல்லா மாற்றங்களும் சீரழிந்து இன்னும் மோசமான விளைவுகளையே உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காந்திய வழியின் வெற்றிக்கு மிகச்சிறந்த உதாரணம் நெல்சன் மண்டேலா தென்னாப்ரிக்காவில் பெற்ற வெற்றி. மிகச்சிறந்த உதாரணமாக வரப்போவது ஆங் சன் சூசி பர்மாவில் பெறப்போகும் வெற்றி.
நண்பர்களே, நான் சொல்ல விழைவது இதுதான். காந்தி அவரது காலகட்டத்துக்கு வெகுவாக முன்னால் நடந்தவர். அவரது காலகட்டத்தில் புரிந்துகொள்ளப்படாதவர். கிண்டலுக்கும் வசைகளுக்கும் உள்ளானார். அவரது காலகட்டத்தில் எல்லாராலும் நம்பப்பட்டதைத் துணிவுடன் நிராகரித்தவர். எது தனக்கு உண்மையாகப்படுகிறதோ அதைத் தயங்காமல் முன்வைத்தவர். அந்தத் தற்சார்பினால்தான் அவர் உலகசிந்தனைக்குப் பெரும் பங்களிப்பை அளித்தார். இன்று அதுதான் அவரது அடையாளம்.
அந்தத் தற்சார்பைத்தான் காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த ஞானத்திமிரைத்தான் நாம் அடையவேண்டியிருக்கிறது. வரலாற்றின் முன்னால் நிமிர்ந்து நிற்பது எப்படி என்பதுதான் நமக்குத்தெரியவில்லை. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இந்தியர்களாகிய நாம் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல் இதுதான். நாம் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் வழிபடுகிறோம். அவர்களின் பண்பாட்டை நகல் செய்கிறோம்.
நம்முடைய பாடநூல்கள் எல்லாமே வெறும் மொழியாக்கங்கள். நம் சிந்தனைகள் எல்லாமே கடன் வாங்கியவை. நம்முடைய அரசியல் கொள்கைகள் எல்லாமே போலியானவை. நாம் இன்று உள்ளீடற்ற ஒரு சமூகம்.
ஆகவேதான் உலகின் மிகப்பிரம்மாண்டமான நாடாகிய நமக்கு இன்று எங்கும் எந்த மதிப்பும் இல்லை. எந்தத் துறையிலும் நம்முடையது மட்டுமான எந்தப் பங்களிப்பும் இல்லை. நாம் அதிகபட்சம் செய்வதெல்லாமே தகவல்தொழில்நுட்ப குமாஸ்தா வேலைதான். யாரோ உருவாக்கிய வரைபடத்தை செங்கல் போட்டு நிரப்பும் வேலை மட்டுமே நம்மால் முடிந்தது.
ஆகவேதான் நம் இளையதலைமுறைக்கு காந்தி முக்கியம். வெள்ளையனை நகல் செய்த சிந்தனையாளர்களும் தலைவர்களுமல்ல, தன் ஆன்மீகத் திமிருடன் அரைநிர்வாணக்கோலத்தில் உலகை நோக்கி நின்ற காந்தி, உலகசிந்தனையைக் கொந்தி உடைத்த காந்திதான் நமக்கான ஆதர்சம்.
மீறிச்செல்லுங்கள். தனித்து நில்லுங்கள். கடைசிவரை உங்கள் ஆழ்மனம் ஏற்றுக்கொள்ளாததைப் பிறருக்காக ஏற்றுக்கொள்ளாதீர்கள். கடைசிவரை நீங்கள் நம்புவதை முன்வைக்க அஞ்சாதீர்கள்.
காந்தியின் கையில் இருந்த கோடரி அந்தத் தற்சார்புதான். அந்தக் கோடரியால் அவர் நம்முள் உள்ள மரபான சிந்தனையைக் கொந்துகிறார். அவரிடமிருந்து உங்கள் கோடரிகளைத் தயார் செய்துகொள்ளுங்கள். உங்களால் முடிந்த உடைவுகளை நீங்கள் நிகழ்த்துங்கள்.
அசல்சிந்தனை என்பது நெருப்பு. அது முடிந்த இடங்களில் எல்லாம் பற்றிக்கொள்ளக்கூடியது. காந்தி ஒரு நெருப்பு. உங்களிலும் அவர் படரட்டும்.
நன்றி.
[9-4-2012 அன்று புதுச்சேரி பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தொடர்பியலுக்கான பொறியியல் துறையில் ஆற்றிய உரை]

தொடர்புடைய பதிவுகள்

Sunday, 21 August 2011

Wednesday, 29 June 2011

Pride of the community

Pride of the community
C. Sivasankaran, better known as Siva in close circles, is a serial entrepreneur as well as the chairman of Sterling group now renamed as the Siva group. He has a net worth of more than $4 billion and is one of the richest Indians.

Sivasankaran is known for his audacious business plans, ability to think ahead of the times, business acumen and knack of spotting opportunities early. He is regarded as having pioneered the broadband and wi-fi technology in the sub-continent. He regularly hits the headlines for buying and selling companies.

Sivasankaran was born in Chennai in 1957. He started out as a fabrication contractor for MRL (now CPCL). He bought Sterling Computers from Robert Amritraj, father of the tennis star, Vijay Amritraj, in the 80s. He created a sensation in the hardware circle by selling PCs for as low as Rs 33,000. Back then in the 1980s computers cost as much as Rs 80,000 per computer. However, he could not sustain his early success and shut down the company. "Not to make a profit is a sin. But to be sentimentally attached to a business for ever is foolish," is an oft-quoted remark of his.

In 1996, Sivasankaran purchased Rapper M.C. Hammer's house in Fremont, California, establishing a U.S. base of operations. Previously, he had been living and operating his business empire from various hotels in Singapore, most prominently the Presidential Suites in Singapore's Ritz Carlton and Pan Pacific Hotels which he took over under long-term leases. The very next year, he launched Aircel, a telecom company based out of Chennai. In 1998, he incorporated Dishnet DSL, the country�s first DSL internet provider. He sold the internet service division of DishnetDSL Limited to VSNL for Rs 270 cr.

In April 2004, Sivasankaran bought 65.4% equity stake in Barista coffee chain from Turner Morrison for Rs 30 cr and the Tata group. He entered the health food business with Aiwo - a health food chain specialising in low-calorie food cooked in olive oil.

Later he bought out RPG Cellular Limited for Rs 208 cr and renamed it Aircel Cellular. It was later sold to Maxis for more than a billion dollars. He hit the headlines again when he bought a 49% stake in Aamby Valley a posh high priced township near Mumbai.

Sivasankaran has also funded Kalaignar TV started by Chief Minister of Tamil Nadu Karunanidhi. He made a foray into shipping and logistics by acquiring Norwegian shipping firm J.B. Ugland Shipping. There were more deals in 2010 as Siva bought a 10% stake in Indore based Ruchi Soya Limited and a 50% stake in a Norwegian mineral water company.

Siva's message to his employees published in his official corporate website throws light on his thinking: "Foresight, early emergence and relentless forward momentum have always helped us in our quest for value and a sustainable model of growth and achievement. We continuously explore, create and adopt new paradigms, to keep our organization ahead of the curve. This approach has kept us at the forefront of business value creation for the past three decades."
நன்றி: Muthaliyar Matrimony

Wedding customs of Mudaliyaars

Wedding customs of Mudaliyaars
Marital traditions:
In our community, the alliance is confirmed through a memorandum where the father of the boy and that of the girl sign the contract. In this engagement ceremony, the groom's family hands over gifts, which include sarees, jewelry, and 21 platters of fruits and dried nuts and fruits. The date of the wedding is also fixed on this day.

Special marital customs: List of ceremonies
1. The engagement: Finalizing the marriage through a memorandum
2. Pandakal: Erecting the marriage 'pandaal'
3. Nalangu: Beautifying the bride
4. The bridegroom's reception: Receiving the groom
5. Preparations on the morning of the wedding
6. Arsan Kal: Erecting the bamboo stick in front of the marriage platform
7. Padapuja & Kasi Yatra: The groom washes his parents' feet and proceeds on a mock pilgrimage
8. Mahalaxmi puja: Prayers offered to the Goddess of wealth
9. Manai Pongal: Rice is cooked in a clay pot
10. Kanganam: Tying of the sacred yellow thread
11. Kanikadanam: Giving away the bride
12. Mangalyam: Tying of the sacred 'mangalyam' on the bride
13. Exchange of garlands: The couple exchange garlands three times
14. Omam: The couple pays homage to the sacred fire
15. Sesha: Blessing the couple
16. Paying homage to the Arasanikkal: The couple goes around the 'arasanikkal' three times
17. Reception: Post wedding celebrations

Special cultural nuances:
All the wedding rituals begin with a 'Ganesha puja'. 'Pandakal' is a ceremony where nine 'sumangalis' or married women smear 'haldi'/turmeric and 'kumkum'/vermilion on a bamboo pillar that is erected for a four-legged 'pandal'/shed.

Prominent Mudhaliyars

Our community got the name Mudaliar from the honorary title Mudali conferred upon top-ranking bureaucratic officials and army officers in medieval South India. It means a person of first rank and is a surname used by Tamil Vellalars and Sengunthars. CN Annadurai, the legendary DMK founder, was a Mudaliar. Popular actor Vikram also belongs to our community.

Prominent Mudhaliyars
Social leaders, activists
OKSR Kumaraswamy Mudaliar aka Tiruppur Kumaran (1904 � 1932) - A leader who died holding the Indian national flag
Thillaiaadi Valliammai - A South African Tamil woman who fought the apartheid regime along with Mahatma Gandhi

Tamil literature
Paventhar Bharathidasan - Tamil poet also known as "Puratchi Kavignar"
Kalyanasundara Mudaliar - Tamil writer
Makaral Karthikeya Mudaliar - Tamil scholar
P. A. Subramania Mudaliar - Tamil scholar
Varadarasanar - Tamil novelist
Mahavidwan Vasudeva Mudaliar - Tamil scholar
Vellai Vaaranaar - Tamil scholar from Tiruvarur
Erode Tamilanban - Noted poet

Philanthropists
Pachaiyappa Mudaliar - Philanthropist after whom the Pachaiyappa's College, Chennai was named.
Raja Sir Ramaswamy Mudaliar - Philanthropist who endowed a hospital

Politics
Natesa Mudaliar � Founder of Justice Party along with Theagaroya Chetty and Dr. T. M. Nair as part of the Dravidian movement.
O. V. Alagesan - Former union minister of India.
T. M. Anbarasan - Current Labour Minister of Tamil Nadu
K. Anbazhagan - Minister of Tamil Nadu and DMK Leader.
C. N. Annadurai - Former Chief Minister of Tamil Nadu and Founder of Dravida Munnetra Kazhagam (DMK)
R. N. Arogyasamy Mudaliar - Indian civil engineer and politician who served as the Minister of Development in the Madras Presidency from 1926 to 1928
M. Bhakthavatchalam - Former Chief Minister of Tamil Nadu and Congress leader
Pulavar K. Govindan - Former speaker, TN legislative assembly
Jayanthi Natarajan - Former MP from Indian National Congress party
Muniswamy Mudaliar - Fiji Indian politician & member of the Legislative Council of Fiji from 1932 to 1937
N. V. Natarajan - Founding member of DMK and former minister of Labour and Backward Classes in the Tamil Nadu government during 1967-75
C. Natesa Mudaliar � Founder of Justice Party
V. R. Nedunchezhiyan - Former Finance Minister of Tamil Nadu and former interim Chief Minister of Tamilnadu.
P. T. R. Palanivel Rajan - (1932-2006) Formerly speaker of Tamil Nadu Assembly,
Endowment Minister
Ponnambalam Arunachalam - Tamil political leader in Ceylon and a member of the Executive Council and the Legislative Council.
Ponnambalam Ramanathan - Former Solicitor-General and Tamil political leader in Sri Lanka.
A. M. Ponnuranga Mudaliar - Former MLA of Sholinghur constituency, INC
Sir P. T. Rajan - Former Chief Minister of Tamil Nadu, Leader Justice Party.
C. Ramaswamy Mudaliar (1905-1997) - Indian politician from Indian National Congress. Member of Lok Sabha for Kumbakonam from 1951 to 1957.
S. J. Ramaswamy Mudali - Former DMK MLA
A. Ranganatha Mudaliar - Indian politician and theosophist from Bellary
S. C. Sadayappa Mudaliar - Former INC MLA
Era Sezhiyan - Former MP
A. C. Shanmugam - Founder New Justice Party, ex-MLA, MP
P. Shanmugam - Former Chief Minister of Pondicherry State and present State Congress Chief.
N. V. N. Somu - Former MP
A. R. Subbiah Mudaliar - Tamil Nadu politician
C. P. Subbiah Mudaliar - Tamil Nadu politician
C. N. Visvanathan - Former MP, Lok Sabha

Founders of educational institutions
V. L. Ethiraj - Founder of Ethiraj College for Women
A. C. Shanmugam - Founder, Dr. M.G.R. Educational and Research Institute
G. Viswanathan - Founder of VIT University, Vellore

Civil service and judiciary
S. Muthiah Mudaliar - High court lawyer and politician, Justice party
Arcot Ramasamy Mudaliar - A senior leader of the Justice Party
Justice R. Sudhakar - Judge of the High Court of Judicature at Chennai
T. V. Rajeswar - IPS Officer and Current Governor of Uttar Pradesh

Sports
Thirunavukkarasu Kumaran- Cricket Player
Vasudevan Baskaran - Former hockey player and captain

Arts and cinema
Pammal Sambandha Mudaliar - Early Tamil theater
Allah Rakha Rahman - Music director, composer and singer. (Born A. S. Dileep in a Hindu Mudaliar family
Anandaraj - Tamil film actor
Kalaipuli Dhanu - Tamil film producer
N. S. Krishnan - Popularly known as Kalaivanar, film comedian, drama artist, playback singer
Na. Muthukumar - Tamil lyricist
Pandiarajan - Tamil film director and actor
G. V. Prakash Kumar- Tamil film music director
M. K. Radha - Cinema actor & recipient of the Padma Shri Award
Aascar Ravichandran - Tamil film producer, Aaskar films
S. Shankar - Tamil film director
V. Ravichandran - Kannada film actor and director
K. S. Ravikumar - Tamil film director and actor
Pammal Sambandha Mudaliar - Playwright and director of Tamil drama
R. K. Selvamani - Tamil film director
R. K. Shekhar - Music conductor and composer for Malayalam films
Thengai Srinivasan - Tamil film actor
Tharini Mudaliar - Australian actress
Pa. Vijay - Tamil lyricist and actor
Vijaya Bhaskar - Kannada film Music Director
Vijayalakshmi Navaneethakrishnan - Singer, composer of Tamil folk songs

Business
Chenniappan - Chairman, Nilgiris
M.B.Nirmal - Founder and chairman of Exnora International
Sivasankaran - Chairman of Sterling group
Ethiraj Mudaliar - Chairman Binny group, Partner Ram Chandra Medical College
(நன்றி:Mudaliyar Matrimony)

Thursday, 4 November 2010

Pomegranate | NS08

தொழில்நுட்பப் பயன்பாட்டின் புதிய உச்சம் இது.கீழே உள்ள சுட்டியை சொடுக்கித்தான் பாருங்களேன்!
Pomegranate | NS08